Saturday, September 10, 2016

நமசிவாய மந்திரம்

காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி 
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது 
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது 
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1) 

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால் 
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது 
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம் 
நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2) 

நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து 
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார் 
தக்க வானவராத் தருவிப்பது 
நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3) 

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் 
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால் 
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி 
நயனன் நாமம் நமச்சிவாயவே. (4) 

கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள் 
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் 
நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5) 

மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய 
பந்தனை யவர் தாமும் பகர்வரேல் 
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் 
நந்தி நாமம் நமச்சிவாயவே. (6) 

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் 
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர் 
விரவியே புகுவித்திடும் என்பரால் 
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7) 

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் 
தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் 
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை 
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8) 

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் 
பாதம் தான்முடி தேடியப் பண்பராய்
யாரும் காண்பதரிதாகி அலந்தவர் 
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9) 

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் 
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால் 
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய் 
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10) 

நமச்சிவாயப்பதிகத்திற்க்குப்பின் ஓம் மங்களம் பாடல் கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.

இனி பாடல் வரிகள் தமிழில் 

ஓம் மங்களம் ஓங்கார மங்களம்

ஓம் நமசிவாய மங்களம்

ந மங்களம் நகார மங்களம்

நாத பிந்து கலா தீத வேத மங்களம் (ஓம்)

ம மங்களம் மகார மங்களம்

மஹா தேவ தயாசிந்து ஈச மங்களம் (ஓம்)

சி மங்களம் சிவாய மங்களம்

சித்த புத்தி ஆத்ம ரூப வேத மங்களம் (ஓம்)

வ மங்களம் வகார மங்களம்

வாத பேத ரஹ’த் பர பிரம்ம மங்களம் (ஓம்)

ய மங்களம் யகார மங்களம்

யதா தத்வ பரிக்ஞான வேத மங்களம் (ஓம்)

No comments:

Post a Comment